தமிழ் மக்களின் மனிதாபிமான பிரச்சினைகளிற்கு தீர்வுகான அரசு இழுத்தடிப்பு பேச்சுக்கள் முறியும் நிலை. இன்று 2 வது நாள்களாக சுவிஸ்சாலந்தில் பேச்சுக்கள் ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன.இன்று காலை நோர்வே அனுசரனையாளர்களை தனித்தனியே சந்தித்த இரு தரப்பினரும் காலை 9.30 மணியளவில் நேரடி பேச்சுக்களில் ஈடுபட்டனர். யுத்த நிறுத்த உடன்படிக்கையை உரிய முறையில் நடைமுறைப்படுத்துதல்,மற்றும் மக்களின் மனிதபிமான பிரச்சினைகளிற்கு தீர்வு விடயங்களை புலிகள் வலியுத்திய போதும் அரசு தரப்பு இவ் விடயங்களிற்கு சாதகமான பதிலை அளிப்பதில் இழுத்தடிப்பு செய்து வருவதுடன் அடுத்த பேச்சிற்கான திகதியை நிர்னாயிப்பதிலேயே அதிக அக்கறை காட்டி வருவதாக செய்திகள். சிறீலங்கா அரசின் இந் நிலைப்பாட்டால் புலிகள் தரப்பினர் அதிருப்தி கொண்டுள்ளதாகவும் தீர்வுகள் காணப்படமால் பேச்சு மேசையில் இருப்பதில் அர்த்தம் இல்லை என புலிகள் தரப்பினர் கருதுவதாகவும்.மதிய உணவிற்கு பின்னர் பேச்சுக்களில் இருந்து புலிகள் வெளியேறக் கூடும் என பிந்தி கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்றை பேச்சுக்களை விட இன்றைய பேச்சுக்களில் நம்பிக்கையீனங்கள் அதிகரித்து செல்வதுடன்.வட போர்முனையில் பாரிய படை எடுப்பிற்கு படையினர் தயாராகி வருவதும் குறிப்பிடத்தக்கது.





