கடந்த காலபேச்சுக்களில் இணக்கம் காணப்பட்ட விடயங்கள் நிறைவேற்றப்பட வேண்டும்-எரிக் யுத்த நிறுத்த ஒப்பந்த அடிப்படையில் பேச்சுகள் அமைய வேண்டும் என சுவிற்சாலந்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பேச்சுக்களில் ஆரம்ப உரை நிகழ்த்திய நோர்வேயின் அபிவிருத்தி அமைச்சர் எரிசொல்கைம் தெரிவித்தார். 4 அம்சங்களின் அடிப்படையில் பேச்சுக்கள் நடைபெற வேண்டும் என்ற கோரிக்கையும் அவரால் முன் வைக்கப்பட்டது. 1.யுத்த நிறுத்த ஒப்பந்தத்திற்கு பின்பு நடைபெற்ற பேச்சுக்களில் இணக்கம் காணப்பட்ட விடயங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் 2.யுத்த நிறுத்த அடிப்படையில் பேச்சுக்கள் நடைபெறவேண்டும் 3.இலங்கையில் உள்ள அனைத்து தரப்பினரையும் திருப்பி படுத்தும் விதத்தில் பேச்சுக்களின் முடிவுகள் அமைய வேண்டும் 4.ஐக்கிய இலங்கை என்ற அடிப்படையில் தீர்வுகள் ஆமைய வேண்டும். மேற்கண்ட விடயங்கள் எரிக்சொல்கைமால் முன்வைக்கப்பட்டது. இந்த கோரிக்கைகள் உலக நாடுகளால் முன்வைக்கப்பட்டது என்று சொல்கைம் தெரிவித்த போதும். இவற்றை இரு தரப்பினரும் ஏற்றுக் கொண்டார்களா என்பது பற்றி தெரியவில்லை





