Saturday, October 28, 2006

யுத்த நிறுத்தத்தை சிறீலங்கா அரசு மீறி விட்டது

யுத்த நிறுத்தத்தை சிறீலங்கா அரசு வெளிப்படையாக மீறி விட்டது என சுவிசில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பேச்சுகளில் ஆரம்ப உரை நிகழ்திய தமிழீழ அரசியல் துறைப்பொறுப்பாளரும் பேச்சுவார்த்தை குழு பொறுப்பாளரும் ஆகிய சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். இன்று காலை ஆரம்பித்த பேச்சுக்களில் பேச்சு வார்த்தைக் குழுக்களின் ஆரம்ப உரையை சிறீலங்கா அரசு தரப்பில் சிறிபால்டி சில்வா 70 நிமிடங்கள் ஆற்றியதை தொடர்ந்து தமிழர் தரப்பில் சு.ப.தமிழ்ச்செல்வன் 30 நிமிடங்கள் தனது ஆரம்ப உரையை நிகழ்த்தினார். அவர் மேலும் தெரிவிக்கையில் சிறீலங்கா அரசு தனது நடவடிக்கைகள் மூலம் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாக மீறி விட்டது.அத்துடன் கடந்த காலப்பேச்சுக்களில் தீர்வு காணப்பட்ட விடயங்களை சிறீலங்கா அரசு நிறைவேற்றத்தவறி விட்டது போன்ற முக்கியமான விடயங்களை தெரிவிப்பதாக 30 நிமிடங்கள் அவரது உரை இருந்தது.இதனைத் தொடர்ந்து பேச்சுக்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.