படையினரின் முன்னேற்ற முயற்சி முறியடிப்பு: 5 படையினர் பலி: 12 படையினர் படுகாயம். மட்டக்களப்பில் விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதி நோக்கி சிறீலங்காப் படையினர் நடத்திய முன்னேற்ற நகர்வு விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 7 மணியளவில் மட்டக்களப்பு வெலிக்கந்தையிலிருந்து திருகோணமடு நோக்கிய படை நடவடிக்கையை சிறீலங்காப் படையினர் மேற்கொண்டுள்ளனர். சிறீலங்காப் படையினர் முன்னேற்ற நடவடிக்கைக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய எதிர்த் தாக்குதலில் சிறீலங்காப் படையினர் தரப்பில் ஐவர் கொல்லப்பட்டு மேலும் பன்னிரண்டு படையினர் படுகாயமடைந்துள்ளனர். படையினரின் முன்னேற்ற நடவடிக்கையில் சிறீலங்காப் படையினர் 400 பேர் வரையில் ஈடுபட்டதோடு படையினரின் முன்னேற்ற நகர்வுக்கு ஆதரவாக சிறீலங்காப் படையினர் மூர்க்கமான எறிகணைச் சூட்டாதரவை வழங்கியுள்ளனர்.





