அநுராதபுரம் கெப்பதிகொலாவ - மதவாச்சி வீதியில் இன்று காலை கிளை மோர் குண்டோன்று வெடித்ததாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. பஸ் ஒன்றை இலக்குவைத்தே இக்கிளைமோர் வெடிக்க வைக்கப்பட்டுள்ளதாகவும் .எனினும் இவ் வெடிப்புச் சம்பவத்தால் எவரும் காயமடைய வில்லை என தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் மேலும் தெரிவித்தார்.





