இணைத்தலைமை நாடுகள் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் -எஸ்.கஜேந்தரன் வடக்கில் மக்கள் மீதான கெடுபிடிகள் குறைக்கப்பட்டு, ஏ 9 வீதித் திறப்பு, அவசரகால சட்ட நீக்கம், போன்ற விடயங்கள் தொடர்பாக இணைத்தலைமை நாடுகள் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்தரன் தெரிவித்துள்ளார். புதிய அரசாங்கம் பதவி ஏற்று 11 மாதங்கள் கடந்து விட்ட இந்த நிலையில், இனப்பிரச்சனைத் தீர்வு தொடர்பில் வழங்கப்பட்ட சந்தர்ப்பத்தை அரசாங்கம் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ளவில்லை என அவர் விடுத்துள்ள அறிக்கையில் குற்றம் சுமத்தியுள்ளார்





