சிநேதியின் வீட்டிற்கு சென்று வருவதாகக் கூறிச் சென்ற பாடசாலை மாணவியை கடந்த மூன்று நாட்களாக காணவில்லையென யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆனைக்குழுவில் பெற்றோர்கள் முறைப்பாடு செய்துள்ளார்கள் கொழும்புத்துறை ஆனந்தன் வடலி வீதியைச் சேர்ந்த துரை பாலசிங்கம் தமிழினி வயது 14 கொழும்புத்துறை துரையப்பா மகாவித்தியாலயத்தில் ஆண்டு 9 ல் கல்வி கற்க்கும் மாணவியே கடந்த மூன்று நாட்களாக காணவில்லையென முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது இவர் தனது நண்பியின் வீட்டிற்குச் சென்று பாடசாலைப் புத்தகம் பெற்றுக் கொண்டு வருவதாக கூறி வீட்டில் இருந்து பிற்பகல் 4.00 மணியளவில் கடந்த செவ்வாய் கிழமை பிற்பகல் புறப்பட்டுச் சென்றதாகவும் இதுவரை அவர் வீடு திரும்பவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிட்ட மாணவி செல்லும் பாதையில் இராணுவ முகாம் மற்றும் மாம்பழம் சந்தி மலை வேம்படி இராணுவ முகாம்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது





