Thursday, October 26, 2006

கப்பல் பயணத்திற்கு அலையும் யாழ்.மக்கள்.

யாழ்ப்பாணத்தில் இருந்து தென் பகுதிக்கான கப்பல் பயணத்தை மேற் கொள்வதற்கு பொது மக்கள் நாளாந்தம் பல இடங்களுக்கும் அலைந்து திரிவதுடன் பல ஆவணங்களையும் தேட வேண்டிய துர்ப்பாக்கிய நிலமையிலும் காணப்படுகின்றார்கள் கிராம அலுவலர்களிடம் கடிதம் பெற்றுச் சென்று பின்னர் உரிய பகுதி இராணுவ முகாமின் சிவில் அதிகாரியிடம் தொடர்பு கொண்டு படிவம் பெற்று அதன் பின்னர் படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்டு மீண்டும் கிராம அலுவலர் கையொப்பம் பிரதேச செயலகத்தில் சென்று கையொப்பம் பெற்று மீண்டும் பகுதி படைத்தலைமையகத்திறகு சென்று படிவங்களை கையளிக்க வேண்டும் என பல நடைமுறைளைக்கடக்க வேண்டிய நிலமை காணப்படுகின்றது இந்தப் படிவங்களுடன் செல்வதற்கான காரணம் குறிப்பிட்ட தட்டச்சு செய்யப்பட்ட கடிதம் விசேட தேசிய அடையாள அட்டைப் பிரதிகள் மற்றும் உரிய படிவம் உட்பட ஏனைய கடிதங்கள் அடையாள அட்டைப் பிரதிகளின் மூன்று கொப்பிகள் என பல ஆவணங்களையும் சமர்பிக்க வேண்டும் என்பதுடன் பல மணித்தியாலங்கள் காத்திருக்க வேண்டிய அவல நிலமையும் காணப்படுகின்றது