மீட்டியா கொடையில் இரு பொலிஸார் உட்பட மூவரைக் கொலை செய்துவிட்டு தப்பி சென்ற சந்தேக நபர்கள், இன்று பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். மீட்டியாகொட கொலை தொடர்பான ஆயுதங்களா தேடிச்சென்ற போது பொலிஸார் மீது குறித்த சந்தேக நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். பொலிஸார் மேற்கொண்ட பதில் துப்பாக்கி சூட்டில் சந்தேகநபர்கள் பலியாகியுள்ளதாக அம்பலாங்கொடை தலைமை பொலிஸ் பரீட்சகர், என்.பி ஆரியரத்ன தெரிவித்த அதேவேளை மட்டக்களப்பு செங்கலடி பழைய படாமாளிகைக்கருகில் இன்று வியாழன் காலை இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 4 பெண்கள் உட்பட 6 பேர் காயமடைந்துள்ளதாக மட்டக்களப்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மக்ஸி பொக்டர் தெரிவித்தார். பிரதான வீதிக்கருகிலுள்ள தோட்டமொன்றில் கீரை பிடுங்குவதற்க்காக 4 பெண்களுடன் 2 சிறுவர்கள் சென்றுள்ளனர். தோட்டத்தில் கிடந்த குண்டை சிறுவர்கள் எடுத்து விளையாடிய போது குண்டு வெடித்துள்ளது. காயமடைந்த 6 பேரும் மட்டகளப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.





