மட்டக்களப்பு காத்தான்குடி காவல்துறைக்குட்பட்ட தளங்குடாவில் வியாழன் இரவு 8.00 மணியளவில் இளைஞன் இனம் தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவர் 21 அகவையுடைய மகேஸ்வரன் கங்கேஸ்வரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சடலம் மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. வீட்டிக்கு வந்த ஆயுததாரிகள் இவரை அழைத்து கொண்டு சுட்டுவிட்டு தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.





