யாழ் குடாநாட்டில் பாடசாலை செல்லும் மாணவர்களில் பலர் காலை உணவு அருந்தாமலே பாடசாலைகளுக்கச் சென்று வருகின்றார்கள் இம் மாணவர்கள் பட்டினியுடன் செல்வதினால் ஆசிரியர்கள் பாடங்களை நடத்திவரும் வேளையில் மயங்கி விழும் நிலமையும் காணப்படுகின்றது யாழ்ப்பாணத்தில் பரவலாக உணவுப் பொருட்களுக்கு பலத்த தட்டுப்பாடு காணப்படகின்றது இந் நிலமையில் பெற்றோர்களுக்கு தொழில் இல்லாத நிலமையும் கடந்த மூன்று மாதங்களாக காணப்படுகின்றது வெளிச்சந்தையில் பொருட்களின் விலை நாளுக்கு நாள் மலை போல ஏறிக் காணப்படுகின்றது தற்போது அரிசி 140 ரூபா முதல் 180 ரூபாவுக்கும் மா 150 ரூபாவுக்கு கூடுதலாகவும் சீனி 400ரூபாவுக்கு மேலும் மற்றும் செத்தல் மிளகாய் மல்லி போன்றவை 500ரூபாவைக்கடந்தும் பால் மா என்பவை முற்று முழுதாக சந்தையில் இல்லாமலும் உள்ளது இத்தகைய அவல நிலமை காரணமாக யாழ் குடாநாட்டுப்பாடசாலைகளுக்கச் செல்லும் மாணவர்கள் பாடசாலையில் மயங்கி விழும் நிலமை காணப்படுவதுடன் பாடங்களில் அக்கறை காட்டாத நிலமையும் காணப்படுவதாக ஆசிரியர்கள் அதிபர்கள் தெரிவிக்கின்றார்கள் இத்தகைய அவல நிலமையை வெளிக் கொண்டு வருவதில் யாழ் குடாநாட்டில் இயங்கும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களும் சரி உள்ளுர் அரச சார்பற்ற நிறுவனங்களும் சரி சிறுவர் பராமரிப்பு அமைப்புக்கள் சரி சிறுவர் உரிமை அமைப்புக்கள்சரி உண்மை நிலமையை வெளிக் கொண்டு வருவதில் நாட்டில் இடம் பெறும் வன்முறைகள் ஆள் கடத்தல்கள் கொலைகள் காரணமாக உண்மையைக் கூற பின்னடித்து நிற்கின்றார்கள் என்பதும் சுட்டிக்காட்டக் கூடியதாகும்





