Wednesday, October 25, 2006

ஊரடங்கை நீக்க முன்னரே கிளைகள் முன் மக்கள் கியூவில்

குடாநாட்டிலுள்ள ப.நோ.கூ. சங்கக் கிளைகளில் உணவுப் பொருள்களைக் கொள்வனவு செய்வதற்காக ஊரடங்கு தளர்த்தப்படுவதற்கு முன்னரே மக்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றனர். தற்போது அத்தியாவசியப் பொருள் களுக்கு குடாநாட்டில் பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றது.தனியார் கடைகளில் அத்தியாவசியப் பொருள்களைப் பெறுவது என்பது குதிரைக் கொம்பாகவே உள்ளது. இந்நிலையில் ப.நோ.கூ. சங்கக் கிளைகளூடாகப் பொருள்களைப் பெற் றுக்கொள்வதற்கு மக்கள் முண்டியடிக்கின்றனர்.கொட்டும் மழையைக் கூடபொருட் படுத்தாது பொருள்களைப் பெற்றுக்கொள்வதிலேயே மக்கள் குறிப்பாக உள்ளனர். பொருள்களைப் பெற்றுக்கொள்வதற்கு மக்கள் வயது வேறுபாடு இன்றி ப.நோ.கூ. சங்கக் கிளைகளில் நிற்பதைக் காணமுடிகிறது. சங்கக் கிளைகள் காலை 9 மணிக்கே திறக்கப்படுகின்றன. ஆனால், மக்கள் ஊரடங்கு தளர்த்தப்படுவதற்கு முன்னரே கடைகளின் முன்னால் வரிசை கட்டுகின்றனர்.