Wednesday, October 25, 2006

புலிகளின் பேச்சுக்குழுவில் இரா.உருத்திரகுமாரன்

ஜெனிவாவில் எதிர்வரும் 28, 29 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள அரசு விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தைகளில் புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்கான ஆலோசகர் இரா. உருத்திரகுமாரனும் பங்குபற்றுவார். அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தலைமையிலான குழுவுடன் இவரும் பேச்சில் கலந்து கொள்வார் என்றுநேற்றிரவு தெரிவிக்கப்பட்டது. விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரும் மதியுரைஞருமான அன்ரன் பாலசிங்கம் சுகயீனம் காரணமாக இந்தப் பேச்சில் கலந்துகொள்ளவில்லை என்பது தெரிந்ததே.