Tuesday, October 24, 2006

யாழ்ப்பாணத்தில் உள்ளுர் உற்பத்திக்கு ஊக்குவிப்பு.

யாழ்ப்பாணம் செயல் திறன் அரங்க செயற்பாட்டுக் குழுவினர் தற்போதைய யாழ் குடாநாட்டின் உணவுப் பற்றாக் குறையைக் கருத்தில் கொண்டு உள் நாட்டில் உப உணவு உற்பத்திக்கான முன்னேற்பாட்டு நடவடிக்கையை மேற் கொண்டுள்ளார்கள். இதன் ஒரு கட்டமாக தென்மராட்சிப்பகுதியில் உள்ள பதினான்கு கிராமத்தில் உள்ள செயல் திறன் அரங்கு மகளிர் குழுவினருக்கு உற்பத்திக்கான மரவள்ளிக் கட்டைகளை வழங்கி உள்ளார்கள். இத் திட்டத்தில் கைதடி மேற்கு குமரநகர், உதயநகர், தச்சன்தோப்பு, கைதடி, நாவற்குழி தெற்கு, கோயிலாக்கண்டி, செல்வாநகர், முன்னூறு வீட்டுத்திட்டம், வீரபத்திரர் கோயிலடி, வேலம்பிராய், கள்ளிநகர், இராஐபுரி, நவபுரம், ஆகிய கிராமங்களைச் சேர்ந்த முன்னூறுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. சுமார் எழுபது நாட்களில் பயன்தரக்கூடிய மரவள்ளிக் கட்டைகள் இந்த திட்டத்தில் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்த்ககதாகும்