வடமராட்சி உடுப்பிட்டியில் நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் சிறீலங்காப் படைச்சிப்பாய் படுகாயமடைந்துள்ளார். இன்று காலை 9.30 மணியளவில் உடுப்பிட்டி நாலவடிப் பகுதியில் வீதி ரோந்தில் ஈடுபட்ட படையினரை இலக்கு வைத்தே கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வீதியில் தரித்து நின்று மிதிவண்டியை இராணுவச் சிப்பாய் நெருங்கியபோது மிதிவண்டியில் பொருத்தப்பட்ட கிளைமோர் வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. இதன்போது சிறீலங்கா இராணுவச் சிப்பாய் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை மந்திகை மருத்துவமனையில் அனுமதிகப்பட்டுள்ளார். படுகாயமடைந்த படைச்சிப்பாயின் இரு கண்களும் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் பலாலி இராணுவ மருத்துவமனைக்கு மேலதிக சிகிற்சைக்காக மாற்றபட்டுள்ளார்.





