சேருநுவரப் பகுதியில் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இன்று மதியம் 1 மணியளவில் சேருநுவச் சந்தியில் இப்படுகொலை நடத்தப்பட்டுள்ளது. கொல்லப்பட்டவர் கிளிவெட்டி தங்கநகரைச் சேர்ந்த 27 அகவையுடைய நடராசா இந்திரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சேருநுவப் பிரதேசம் என்பது திருமலையில் தென்புறத்தில் அமைந்துள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது.





