அம்பாறையில் கருணா குழுவினரால் மேசன் தொழிலாளி சுட்டுக்கொலை. அம்பாறை மாவட்டத்தின் திருக்கோயில் தம்பிலிவில் பகுதியில் கருணா குழுவினால் இளைஞன் ஒருவர் கடந்த சனிக்கிழமை மாலை 7.30 மணியளவில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவர் தனபாலசிங்களம் விஜிதரன் வயது 21 இவர் தம்பிலிவில் பகுதியில் சுனாமியால் பாதிக்கப்பட்டு திருகோயில் குடிநிலம் சுனாமி முகாமில் வசித்துவருகின்றார். இவர் ஒரு மேசன் தொழிலாளி வீட்டியில் இருந்த போது வீட்டிக்கு வந்த இக்குழுவினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.





