Monday, October 23, 2006

விடுதலைப் புலிகளுக்கு உலங்கு வானூர்தி ஏற்பாடு.

நாளை விமானநிலையம் செல்ல விடுதலைப் புலிகளுக்கு உலங்கு வானூர்தி ஏற்பாடு. ஜெனிவாப் பேச்சில் கலந்துகொள்வதற்கு விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் அடக்கிய தூதுக்குழுவினர் தயாராகிவிட்டனர். தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் தலைமையில் ஜெனிவாப் பேச்சில் கலந்துகொள்ளும் விடுதலைப் புலிகளின் பேச்சுக்குழுவினர் நாளை செவ்வாய்கிழமை உலங்கு வானூர்தி மூலம் கொழும்பு சென்று பின்னர் ஜெனிவா செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தூதுக்குழுவினரை கொழும்பு விமான நிலையத்துக்கு ஏற்றி வருவதற்காக ஸ்ரீ லங்கா விமானப்படையின் விசேட ஹெலிக்கொப்டர் ஒன்றை கிளிநொச்சியில் தரையிறக்குவதற்கு சிறீலங்கா அரசாங்கம் இணங்கியுள்ளதுடன் இவர்களுக்கான பாதுகாப்பு உத்தரவாதத்தையும் வழங்கியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளை வன்னியில் இருந்து அழைத்துச் செல்ல இலங்கைக்கான நோர்வேத் தூதுவர் ஹான்ஸ் பிரஸ்ட்கர் உலங்கு வானூர்தியில் வந்து செல்வார் எனத் தெரியவருகின்றது.