Monday, October 23, 2006

50 சிறுவர்கள் கருணா துணை ஆயுதக் குழுவினரால் கடத்தல்.

திருமலையிலும் அதன் அண்டைய பகுதிகளிலும் கடந்த சில நாட்களினுள் சிறீலங்கா துணை இராணுவக் குழுவான கருணா அணியினரால் வயது குறைந்த 50 சிறுவர்கள் கடத்தப்பட்டுள்ளனர். கடத்தப்பட்ட இளைஞர்கள் பொலநறுவை தீவுச்சேனை முகாமுக்கு கட்டாய ஆயுதப் பயிற்சிக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். சிறீலங்காவின் பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்புடன் திருமலையில் கருணா துணை ஆயுதக்குழுவினர் அலுவலகம் ஒன்றைத் திறந்து வயது குறைந்த சிறுவர் ஆட்கடத்தல்களைச் செய்து வருகின்றமை இங்கே குறிப்பிடத்தக்கது.