சிறிலங்கா அரசுடன் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகள் இன்று கிளிநொச்சியிலிருந்து சிறிலங்கா விமானப்படையினரின் உலங்கு வானூர்திமூலம் ஜெனீவாவிற்கான பயணத்தினை மேற்கொண்டுள்ளனர்.
இன்று காலை 10.00மணியளவில் விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பொறுபாபளர் சு.ப தமிழ்ச் செல்வன் தலைமையிலான பேச்சுவார்த்தைக் குழுவினர் கிளிநொச்சியிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனர் இக்குழுவில் தமிழீழ காவல்த்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன், விடுதலைப்புலிகளின் இராணுவப்பேச்சாளர் இ.இளந்திரையன், சமாதான செயலகப் பணிப்பாளர் சி.புலித்தேவன், ஆகியோர் அடங்குகின்றனர்.
ஜெனீவாப் பேச்சில் கலந்துகொள்வதற்கென கட்டுநாயக்கா விமான நிலையத்தினூடாக ஜெனீவாவிற்கு புறப்படவுள்ளனர்.சிறிலங்காவிற்கான நோர்வே தூதுவர் ஹான்ஸ்பிறட்ஸ்கர் விடுதலைப்புலிகளின் பேச்சுவார்த்தைக் குழுவினருடன் உலங்கு வானூர்தியில் பயணிக்கிறார்.
Tuesday, October 24, 2006
விடுதலைப்புலிகளின் பேச்சுக் குழுவினர் ஜெனீவா பயணம்.
Tuesday, October 24, 2006





