Tuesday, August 29, 2006

சம்பூர் சமரில் 50 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர்: 10 போராளிகள் வீரச்சாவை தழுவியுள்ளனர். எழிலன் சம்பூரில் சமரில் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் தெரிவித்துள்ளார்.கனடா தமிழ்ச்சோலை வானொலிக்கு சி.எழிலன் இன்று செவ்வாய்க்கிழமை அளித்த நேர்காணலில் இதைத் தெரிவித்துள்ளார்.சி. எழிலன் கூறியுள்ளதாவது: எங்களது கட்டுப்பாட்டில் உள்ள சம்பூர் பிரதேசம் மீது சிறிலங்கா இராணுவம் தாக்குதல் நடத்தி கைப்பற்ற வேண்டுமாயின் கட்டைப்பறிச்சன் தொடக்கம் மகிந்தபுரம் வரைக்கும் தரைவழியில் பாரிய நகர்வை மேற்கொள்வதோடு பெருந்தொகையான இழப்பையும் சந்திக்க வேண்டியிருக்கும்.நேற்று திங்கட்கிழமை அதிகாலை 3.30 மணி முதல் இராணுவத்தினர் தொடங்கியுள்ள வலிந்த தாக்குதல் நடவடிக்கைக்கு எதிராக விடுதலைப் புலிகள் மேற்கொண்ட பதில் தாக்குதல் நடவடிக்கையில் 50 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். 150-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.எமது தரப்பில் 10 போராளிகள் வீரச்சாவை தழுவியுள்ளனர். திருகோணமலை கடற்படைத் தளம் மீது எறிகணை வீச்சுத் தாக்குதல் நடத்தப்படுகிறதா என்பது உள்ளிட்ட மேலதிக விவரங்களை தற்போது வெளியிட இயலாது என்றார் எழிலன்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.