சூரியன் எஃப்.எம். பிரதம செய்தியாசிரியர் குருபரன் கடத்தல்? கொழும்பில் ஒலிபரப்பாகி வரும் பிரபல தனியார் வானொலியான சூரியன் எஃப்.எம்மின் பிரதம செய்தியாசிரியர் நடராஜா குருபரன் காணாமல் போயுள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணிக்கு தனது வீட்டிலிருந்து கடமைக்காக வானொலி நிலையம் நோக்கிச் சென்றதாகவும், அவர் அலுவலகம் வந்து சேரவில்லை என்பதால் காலை 6.30 மணியளவில் செல்லிடப்பேசியில் அலுவலகத்தினர் தொடர்பு கொண்டனர். செல்லிடப்பேசி அழைப்புக்கு பதில் கிடைக்காத நிலையில் அவரது வீட்டுக்கு தொடர்பு கொண்டனர். அலுவலகம் வந்து சேராத தகவலையறிந்த அவரது மனைவி, வீதியில் வந்து பார்த்த போது தொலை தூரத்தில் அவரது வாகனம் நிற்பதனை கண்ணுற்றார். வாகனத்திற்குள் குருபரனின் செல்லிடப்பேசி இருந்துள்ளது. இதன் பின்னரே அவர் கடத்தப்பட்ட விடயம் தெரியவந்துள்ளது.
Tuesday, August 29, 2006
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.