Sunday, December 18, 2016

யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் வாகன விபத்து; பத்து பேர் வரை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம், சாவகச்சேரி சங்கத்தானைப் பகுதியில் இன்று சனிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் பத்து பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.  

தென்னிலங்கையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வான் ஒன்றும், யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் சிக்கி 3 பெண்களும் 7 ஆண்களும் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாகவும், வானில் பயணித்த ஏனையோர் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இதேவேளை, உயிரிழந்தவர்களின் உடல்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.  

வேகமாக வந்த ஹயஸ் ரக வானின் சில்லு ஒன்றில் காற்று இறங்கியதால் வேக கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த பேருந்துடன் மோதி விபத்து இடம்பெற்று உள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.