Monday, January 27, 2014

வடக்கில் சமாதானமாம் - கோத்தாபாய கூறுவதை நம்ப உலகத் தலைவர்கள் முட்டாள்கள் அல்ல: - சுரேஷ் பிரே­மச்­சந்­திரன்

வட மாகாண தமிழ் மக்கள் யுத்தம் முடிந்து நான்கு வரு­டங்­க­ளுக்கு பின்­னரும் இரா­ணுவக் கட்­டுப்­பாட்­டுக்­குள்­ளேயே வாழ்­கின்­றனர். இதனை உலகம் அறியும். எனவே, அங்கு சமா­தானம் நில­வு­வ­தாக பாது­காப்புச் செய­லாளர் கூறு­வதை நம்ப உலக நாடுகள் அதன் தலை­வர்கள் முட்­டாள்கள் அல்ல என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பேச்­சா­ளரும், எம்.பி.யுமான சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் தெரி­வித்தார்.
நாட்டில் சிங்­கள பெளத்த பேரி­ன­வாத சக்­தி­களை அர­சாங்­கமே தூண்டி விடு­வ­தா­கவும் அவர் தெரி­வித்தார். வெளி­நாடு சென்று தீர்வைப் பெற முடி­யாது. எமது குடும்பம் அர­சியல் வர­லாறு கொண்ட குடும்பம் என பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜபக்ஷ தெரி­வித்­துள்ள கருத்து தொடர்­பாக தமது பக்க நிலைப்­பாட்டை தெளி­வு­ப­டுத்­து­கை­யி­லேயே சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் இதனைத் தெரி­வித்தார்.

அவர் மேலும் இது தொடர்­பாக தெளி­வு­ப­டுத்­து­கையில்,

யுத்தம் முடிந்­து­விட்­டது. ஆனால் சமா­தானம் வந்­து­விட்­ட­தாகக் கூற முடி­யாது. தமிழ், சிங்­கள மக்கள் இணைந்து ஒற்­று­மை­யாக வாழும் சூழ்­நிலை இன்­னமும் ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. எனவே, பாது­காப்புச் செய­லாளர் நாட்டில் சமா­தானம் நில­வு­வ­தா­கவும், அதனை சீர்­கு­லைக்க வெளி­நா­டுகள் முயற்­சிப்­ப­தா­கவும் கூறு­வது 'மந்­திரம்' ஓது­வ­தற்கு சம­மா­ன­தாகும்.

யுத்தம் முடிந்து 4 வரு­டங்கள் கழிந்த பின்­னரும் வட­ப­குதி தமிழ் மக்கள் இரா­ணுவக் கட்­டுப்­பாட்­டுக்­குள்­ளேயே அடக்­கி­யா­ளப்­ப­டு­கின்­றனர். இரா­ணுவ முகாம்கள் பல அகற்­றப்­பட்­டுள்­ள­தாக கூறப்­பட்­டாலும் அவ்­வா­றான நிலை அங்கு கிடை­யாது. மாறாக இரா­ணுவ முகாம்கள் விஸ்­த­ரிக்­கப்­பட்டு வருகின்­றன. அதற்­காக மக்­களின் பூர்­வீக சொந்­தக்­கா­ணிகள் சுவீ­க­ரிக்­கப்­ப­டு­கின்­றன.

உலகில் எந்­த­வொரு நாட்டில் மக்கள் இரா­ணுவ அடக்கு முறைக்குள் ஆளப்­ப­டு­கின்­ற­னரோ, அங்கெல்லாம் போராட்­டங்கள் தொடர்ந்து கொண்­டேதான் இருக்கும். இதுதான் உலக நியதி. இதனை மாற்ற முடி­யாது. நாட்டில் சமா­தானம் இல்லை. யுத்தம் முடிந்து 4 வரு­டங்கள் கடந்­து­விட்­டன. அர­சாங்கம் சிங்­கள பெளத்த பேரி­ன­வாதச் சக்­தி­களின் சிறைக்­கை­தி­யாக சிக்­கிக்­கொண்­டி­ருப்­ப­தோடு மட்­டு­மல்­லாது சிங்­கள பெளத்த பேரி­ன­வாதச் சக்­தி­களை தூண்­டி­விட்டு இந்துக் கோவில்கள், முஸ்லிம் பள்­ளி­வா­சல்கள், கிறிஸ்­தவ தேவா­ல­யங்­களை உடைக்­கின்­றது.
இதன்­மூலம் தமி­ழர்­க­ளுக்கு உரி­மை­களை வழங்க மாட்டோம். மாறாக, சிங்­கள பெளத்த பேரி­ன­வாத தீவி­ர­வாத சக்­தி­களின் அடி­மை­க­ளா­கவே தமி­ழர்கள் வாழ வேண்டும். தமி­ழர்­க­ளுக்கு உரிமை என்ற பேச்­சுக்கே இட­மில்லை என்­பதே அர­சாங்­கத்தின் கொள்­கை­யாகும். அர­சாங்­கத்தின் சமா­தா­னமும், தேசிய நல்­லி­ணக்­கமும் உதட்­ட­ள­வி­லேயே உள்­ளது. தவிர நடை­முறை சாத்­தி­ய­மா­ன­தாக இல்லை.

எமது பிரச்­சி­னையை உள்­நாட்டில் தீர்க்க முடியும். வெளி­நா­டுகள் தேவை­யில்லை. எமக்கு அர­சியல் அனு­பவம் உள்­ளது போன்ற பாது­காப்புச் செய­லா­ளரின் மந்­தி­ரங்­களை சர்­வ­தேசம் செவி­ம­டுக்­காது. ஏனென்றால் நடை­மு­றையில் நாட்டில் எது­வுமே இல்லை. சர்­வ­தே­சமோ, அதன் தலை­வர்­களோ இவர்­களின் மந்­தி­ரங்­களை கேட்­கு­ம­ள­விற்கு முட்­டாள்­க­ளல்ல.

எதிர்வரும் ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு மாநாட்டில் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்குமென்பதை எதிர்பார்த் திருக்கின்றோம். எமது மக்களுக்கு நியாயத்தை பெற்றுக் கொள்வதற்கான முன்னகர்வுகளையும் நாம் மேற்கொண்டு வருகின்றோம் என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.