Sunday, December 18, 2016

பிரித்தானியாவில் 19 மீற்றர் உயரத்திற்கு எழுந்த பேரலை! விஞ்ஞானிகள் எச்சரிக்கை

உலக வரலாற்றில் இதுவரை பதிவாகாத மிகப்பெரிய கடல் அலை வடக்கு அட்லாண்டிக் கடலில் ஏற்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஐஸ்லாந்து மற்றும் பிரித்தானியாவுக்கு இடையிலான பிராந்திய கடல் மட்டம் திடீரென 19 மீற்றர் வரை உயரமாக எழுந்ததாக உலக காலநிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இந்த பேரலையானது 6 மாடி கட்டடம் ஒன்றிக்கு சமமானதென விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் 81 கிலோமீற்றர் வேகத்தில் வீசிய காற்றினால் இவ்வாறு கடல் அலை 60 அடிக்கு மேல் ஏற்பட்டதாக உலக காலநிலை அவதான நிலையத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் அவ்வாறான பாரிய கடல் அலை 2007ஆம் ஆண்டில் பதிவாகியிருந்தன. அதன் உயர் 18.3 மீற்றராகும்.
நில நடுக்கம் அல்லது சுனாமி நிலைமை இல்லாத சந்தர்ப்பத்தில் கடல் அலை இவ்வாறு பாரிய அளவு அதிகமாக காணப்பட்டால், சுனாமி ஏற்படும் சந்தர்ப்பங்களின் அட்லாண்டிக் பெருங்கடல் அலைகள் பாரிய அளவு உயரத்திற்கு எழும் ஆபத்து காணப்படுவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.