Wednesday, May 02, 2007

கொழும்பில் பதற்றத்தை ஏற்படுத்திய போர் ஒத்திகை

புதன்கிழமை, 2 மே 2007 சிறிலங்கா தலைநகர் கொழும்புத் துறைமுகத்தில் போர் ஒத்திகையால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கொழும்பில் இன்று புதன்கிழமை பிற்பகல் துறைமுகப் பகுதியில் துப்பாக்கி சத்தங்கள், பீரங்கி வேட்டொலிகள் அதிகளவில் எழுந்தன. இதனால் கொழும்பில் மக்கள் பெரிதும் பதற்றமடைந்து சிதறி ஓடினர். இதன் பின்னர் ஊடகங்கள் ஊடாக தாக்குதல் எதுவும் நடக்கவில்லை என்றும் தாக்குதல் ஒத்திகையே நடைபெற்றது என்றும் சிறிலங்கா இராணுவத்தினர் அறிவித்தனர். இந்த ஒத்திகை இன்று மாலை 5 மணிமுதல் 7 மணிவரை நடைபெற்றது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.