Wednesday, May 02, 2007

ஊடக சுதந்திரம் மீறல்களுக்குள்ளாகும் நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு 141ஆவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.

[புதன்கிழமை, 2 மே 2007, 05:47 ஈழம்]

ஊடக சுதந்திரம் மிக மோசமான மீறல்களுக்குள்ளாகும் நாடுகள் தொடர்பாக எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு வெளியிட்டுள்ள பட்டியலில் இலங்கை 141ஆவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.

இதற்கு முன்னைய ஆண்டில் 115ஆவது இடத்திலிருந்த இலங்கை கடந்த வருடம் இடம்பெற்ற ஊடகவியலாளர்களின் படுகொலை ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களுக்கு விடுக்கப்ட்ட அச்சுறுத்தல்கள் காரணமாக 26 இடங்கள் பின்னோக்கி தள்ளப்பட்டுள்ளது.

2006ஆம் அண்டில் ஊடக சுதந்திரம் மிக மோசமான மீறல்களுக்குள்ளான நாடுகளின் பட்டியலில் அதிகளவிலான மீறல்கள் நடைபெறும் நாடாக வடகொரியா குறிப்பிடப்பட்டுள்ளது. பட்டியலில் வடகொரியா 168ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. அதேவேளை ஊடக சுதந்திரத்துக்கு எவ்வித அச்சுறுத்தல்களும் இல்லாத நாடுகளாக அதாவது இப்பட்டியலில் முதலாவது இடத்தை பின்லாந்து, ஐஸ்லாந்து, அயர்லாந்து, நெதர்லாந்து என்பன பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பட்டியலில் இந்தியா 105ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது அதிகளவு பின்னடைவைக் கண்ட நாடுகளில் இலங்கை முன்னிலை பெற்றுள்ளது.எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பினால் ஊடக சுதந்திரம் மிக மோசமான மீறலுக்குள்ளாகும் நாடுகள் தொடர்பாக 2003ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கையில் இலங்கை 89ஆவது இடத்தைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

2004ஆம் ஆண்டு 20 இடங்கள் பின்னோக்கி 109ஆவது இடத்தைப் பெற்ற இலங்கை 2005ஆம் ஆண்டில் மேலும் 6 இடங்கள் பின்னோக்கி 115ஆவது இடத்தைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.