Thursday, April 26, 2007

நியூயோர்க்கில் உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரதிநிதி கைது.

[வியாழக்கிழமை, 26 ஏப்ரல் 2007] நியூயோர்க்கில் உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமெரிக்க பிரதிநிதியான கந்தசாமி கருணாகரன் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக அமெரிக்க நீதித்துறை அமைச்சு நேற்று புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரிப்பில் கருணாகரன் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இலங்கையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைவர்களுக்க்கும் அமெரிக்காவில் உள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக்கும் இடையேயான சந்திப்புக்கு கருணாகரன் காரணம் என்றும் கருணாவும் அவரது உதவியாளர்களும் இராணுவத் தொழில்நுட்பம் தொடர்பாக விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவுக்கு உதவியதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.