[வியாழக்கிழமை, 26 ஏப்ரல் 2007]
கிழக்கு மாகாணத்தில் கருணா குழுவினர் பதற்றத்தை தோற்றுவித்து வருகின்றனர் என கொழும்பில் இருந்து வெளிவரும் ஊடகம் ஒன்றிற்கு தன்னால் வழங்கப்பட்ட கருத்து சரியானது என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
ரவூப் ஹக்கீம் தெரிவித்தாக வெளியான செய்தியை அவர் மறுத்துள்ளதாக ஊடகவியலாளர் மாநாடு ஒன்றில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் முகமாகவே ரவூப் ஹக்கீம் இதனை தெரிவித்தார்.
ஆனால் தனது கூற்றில் தான் உறுதியாக இருப்பதாகவும், இது தொடர்பாக அரசாங்க தலைவர் மகிந்த ராஜபக்சவுடனும் பேச உள்ளதாக ஹக்கீம் மேலும் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் மக்களையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் வண்ணம் கருணா குழுவினரால் முஸ்லிம் மக்கள் மீது துன்புறுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும். இது மோதலை வேறு ஒரு பரிமாணத்திற்கு இட்டுச் செல்லும் என ரவூப் ஹக்கீம் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
Thursday, April 26, 2007
கருணா குழு தொடர்பாக நான் கூறியவை சரியானவை: அமைச்சர் ரவூப் ஹக்கீம்.!!
Thursday, April 26, 2007
No comments
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.