[திங்கட்கிழமை, 30 ஏப்ரல் 2007]
நேற்று அதிகாலை விடுதலைப் புலிகளின் வான்படை விமானங்கள் குண்டுத் தாக்குதல் நடத்திய சிறிது நேரத்தில் கொழும்பு வான் பிராந்தியத்தைக் கடந்து சென்ற எமிரேட்ஸ் விமானசேவை நிறுவனத்துக்குச் சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று பாதுகாப்புத் தரப்பினரைப் பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
வழமைக்கு மாறான மார்க்கத்தில் பறந்துகொண்டிருந்த இந்த வெளிநாட்டு விமானத்தின் மீதும் தரையில் இருந்து சிறிதுநேரம் தாக்குதல் நடத்தப்பட்டது. எதிரி விமானம் எனக் கருதி இந்த விமானத்தை நோக்கியும் குண்டுகள் ஏவப்பட்டன. வான்பரப்பில் நடக்கும் சம்பவங்களை வியப்புடனும் பீதியுடனும் அவதானித்துக் கொண்டிருந்த நகர மக்கள் இந்த வெளிநாட்டு விமானத்தை நோக்கி ஏவப்பட்ட குண்டுகள் பிரகாசத்துடன் சென்று வெடிப்பதையும் கண்டனர். எனினும் அந்த விமானம் வானில் மிக உயரத்தில் பறந்துகொண்டிருந்ததால் தாக்குதலுக்கு இலக்காகவில்லை என்று கூறப்படுகிறது.
எமிரேட்ஸ் விமானசேவை நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் ஒன்றின் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கட்டுநாயக்கா விமான நிலையத்தை நோக்கி வரும் வழியில் இடை நடுவில் இந்த விமானம் சென்னைக்குத் திசை திருப்பப்பட்டது. அவ்வாறு திரும்பிச் செல்லும் வழியிலேயே அது வான் பாதுகாப்புத் தாக்குதலில் சிக்கியது என்று கூறப்படுகிறது. இந்த சம்பவத்தின் எதிரொலியாக எமிரேட்ஸ்விமான நிறுவனம் இலங்கைக்கான தனது சேவைகளை உடனடியாக இடைநிறுத்தியிருக்கிறது.
இத்தாக்குதல் தொடர்பாக சம்பந்தப்பட்ட வெளிநாட்டு விமானத்தின் விமானி பின்னர் கட்டுநாயக்கா விமான நிலைய அதிகாரிகளிடம் முறையிட்டிருக்கிறார்
Monday, April 30, 2007
எமிரேட்ஸ் விமானத்தை நோக்கியும் தாக்குதல்! சேவை இடைநிறுத்தம்!
Monday, April 30, 2007
No comments
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.