Thursday, April 26, 2007

கொழும்பில் ஈ.பி.டி.பி ஒட்டுக் குழுவினர் பணப்பறிப்பு.!!!

[வியாழக்கிழமை, 26 ஏப்ரல் 2007]

வடக்கு - கிழக்கிலும், கொழும்பிலும் வர்த்தகர்களிடம் பணப் பறிப்பில் ஈடுபட்டுவந்த ஒட்டுக் குழுக்கள் தற்பொழுது வீதியால் செல்லும் பொதுமக்களிடமும் பணப் பறிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

கொழும்பு வெள்ளவத்தை போன்ற தமிழர்கள் அதிகமாக வாழும் இடங்களில் வீதியோரங்களில் நிற்கும் ஈ.பி.டி.பி போன்ற ஒட்டுக் குழு உறுப்பினர்கள், வீதியால் செல்லும் தமிழ் மக்களிடம் பணப் பறிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் கொழும்பிலுள்ள தமிழர்கள் தற்பொழுது வீதிகளில் நடமாடுவதற்கு அஞ்சி, வீடுகளில் முடங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கொழும்பிலுள்ள வர்த்தகர்களைத் தொடர்ச்சியாகக் கடத்திச் செல்லும், புளொட், ஈ.பி.டி.பி, மற்றும் கருணா ஒட்டுக் குழுவினர் கப்பம் அறவிட்டு வருகின்றனர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.