[சனிக்கிழமை, 28 ஏப்ரல் 2007] விமானப்படையினர் தேவையற்ற விதத்தில் பதற்றத்தை உண்டாக்கிவிட்டனர் என்று குற்றஞ்சுமத்துவது ஏற்புடையதல்ல. அவ்வாறு குறைசொல்வோர் ஒன்றை மறந்துவிட்டனர். சேதம் ஒன்று விளைவிக்கப்பட்டிருந் தால் அதனால் உண்டாகியிருக்கக் கூடிய அழிவின் பெறுமதிக்கு இத்தகைய குற்றச்சாட்டுக்கள் வெறும் துரும்பு போன்றவை. கட்டுநாயக்கா விமானத் தளப் படை அதி காரிகளின் (வியாழக்கிழமை) நடவடிக்கை குறித்து பிரஸ்தாபித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார் ஊடக அமைச்சர் லக்மன் யப்பா அபேவர்த்தனா. கட்டுநாயக்கா விமானத் தளத்தை நோக்கி சந்தேகத்துக்கு இடமான விமான மொன்று வருவதாகக் கிடைத்த சமிக்ஞைகளை வைத்து, விமானப் படை யினர் எதிர்ப்பு தடுப்பு நடவ டிக்கையாக நடத்திய தாக்குதல் குறித்து விளக்க மளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு சொன்னார். தகவல் திணைக் களத்தில் நேற்று நடத்தப்பட்ட செய்தி யாளர் மாநாட்டில் வைத்தே மேற் கண்டவாறு அமைச்சர் கூறினார். * விமானப் படையினரின் கடமை உணர் வுடனான நடவடிக்கை, அன்று நிகழ்ந்திருக் கக்கூடிய பாதகமான பாதிப்புகளைத் தவிர்த்தது. * கிடைத்த தகவல் முற்றிலும் நம்பகர மானது. புத்தளம் பாலாவியில் உள்ள காவலரண் ஒன்றி லிருந்தே சந்தேகத் துக் குரிய விமானம் பற்றி தகவல் கிடைத் தது.நம்பத்தகுந்த தகவல் கிடைக்கும் போது, உடனடி யாக நடவடிக்கை யில் ஈடுபடுவதே ஒழுக்கம் நிறைந்த அமைப்பு ஒன்றின் கடமையாகும். * சந்தேகத்துக்கு இடமான விமானம் தாக்குதல் நடத்தாமல் தடுப்பதற் கான நடவடிக் கைகள் உடன் மேற்கொள்ளப்பட்டன. கட்டுநாயக்கா விமானத் தளத்திலிருந்து தெரியக்கூடிய தூரத்தில் எந்த விமானத் தின் நடமாட்டமும் கண்டறியப்பட வில்லை. 45 நிமிட நேரத்தில் நிலைமை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட் டது. * விமானப் படை அப்படி ஒரு நடவடிக்கை எடுத்திருக்காவிடில் முன்னைச்சரிக் கையாகத் தகவல் கிடைத்தும் தடுப்பு நடவடிக்கை எதனையும் மேற்கொள்ளவில் லையே என்று மக்கள் கேள்வி மேல் கேள்வி எழுப்பியிருப்பர். இவ்வாறு வியாழக்கிழமையின் விமா னப் படை நடவடிக்கைகளை பல கோணங் களில் ஆதரித்துக் கருத்து வெளியிட்டார் அமைச்சர் அபேவர்த்தன யாப்பா.
Saturday, April 28, 2007
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.