[virakesari.lk]
மேற்கிந்தியத் தீவுகளில் இன்று நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிறிக்கட் போட்டியில் கலந்துகொள்ள இருக்கும் சிறீலங்கா அணிக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் வகையில், சிங்கங்களே சீறி எழுங்கள் என சிறீலங்காவிற்கான பிரித்தானியத் தூதர் நேற்று வாழ்த்து தெரிவித்திருந்தார்.
அத்துடன், தூதரக பணியாளர்களுடன் இணைந்து பிரித்தானிய, மற்றும் சிறீலங்கா கொடிகளைத் தாங்கியவாறும், சிறீலங்கா கிறிக்கட் அணியின் உடையை அணிந்து, துடுப்பாட்ட மட்டையை கையில் ஏந்திவாறும் காட்சியளிக்கும் நிழற்படம் ஒன்றையும் பிரித்தானியத் தூதரகம் நேற்று வெளியிட்டுள்ளது.
சிறீலங்கா பாதுகாப்பு செயலாளரால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் டெய்லி மிரர் ஆங்கிலப் பத்திரிகையின் பிரதம செய்தி ஆசிரியர் அச்சுறுத்தப்பட்ட பின்னர், டெய்லி மிரர் பத்திரிகை காரியாலயத்திற்கு நேரில் சென்ற பிரித்தானியத் தூதுவர் தனது கரிசனையை வெளியிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, பிரித்தானியர் தூதுவரை அவசரமாக அழைத்த சிறீலங்கா பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ, அவரை அச்சுறுத்தும் தொனியில் கலந்துரையாடியதாகச் செய்திகள் வெளியாகி இருந்தன.
இவ்வாறான சம்பங்களால் பிரித்தானிய, மற்றும் ஜேர்மனி தூதுவர்கள் உள்நாட்டு விடயங்களில் தலையிடுவதாகத் தெரிவித்து, இந்த தூதுவர்கள் நாடு கடத்தப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியதன் பின்னணியில், பிரித்தானியத் தூதுவர் மொமினிக் சில்கொட்டின் நேற்றைய வாழ்த்துச் செய்தி வெளியாகி இருப்பதை அந்த ஆய்வாளர் சுட்டிக்காட்டினார்.
பிரித்தானியத் தூதுவர் மொமினிக் சில்கொட் கடந்த ஆண்டு வழங்கிய செவ்வி ஒன்றில் 1948ஆம் ஆண்டு பிரித்தானிய அரசிடமிருந்து சிறீலங்கா சுதந்திரம் பெற்றபோது நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட அரசியல் யாப்புமுறை சிறுபான்மை மக்களாகிய தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்கத் தவறி இருப்பதாகக் கருத்துத் தெரிவித்திருந்தார்.
ஆனால் தற்பொழுது சிங்கள மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிங்கக் கொடியைத் தாங்கியவாறு பிரித்தானியத் தூதுவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி, அவரது நிலைப்பாடு தொடர்பாக கேள்வி எழுப்பி இருப்பதாகவும், கொழும்பின் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Saturday, April 28, 2007
சிறீலங்கா அரசின் அச்சுறுத்தலுக்கு பிரித்தானியத் தூதுவர் டொமினிக் சில்கொட் அடிபணிந்து, அரசிற்கு சார்பு நிலை எடுக்க முனைவதாக, கொழும்பிலுள்ள ஆய்வாளர் ஒரு
Saturday, April 28, 2007
No comments
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.