Saturday, April 28, 2007

கொழும்பில் மின்சாரம் துண்டிப்பு - விமானப்படையினர் வான்நோக்கி தாக்குதல்

[சனிக்கிழமை, 28 ஏப்ரல் 2007] உலகக் கிண்ணத்துக்காக சிறிலங்காவுக்கும், அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான துடுப்பாட்டப் போட்டியை சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள மக்கள் பார்த்துக்கொண்டிருந்த வேளை இருளில் மூழ்கியுள்ளது. கொழும்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.10 மணியளவில் விடுதலைப் புலிகளின் வான்தாக்குதல் அச்சம் காரணமாக சிறிலங்காப் படையினர் தமது நிலைகளில் இருந்து வானத்தை நோக்கி கடுமையான துப்பாக்கிச் சூடுகளை நடத்தினர். இரத்மலானை, வத்தளை, நீர்கோழும்பு, கொலன்னாவ, இராஜகிரிய பகுதிகளில் இருந்து ரேசர் ரக குண்டுகளின் மூலம் வானத்தை நோக்கி சரசமாரியாக தாக்குதல் நடத்தப்பட்டதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன, சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் வான்படையினரின் ரடார் திரைகளில் வானூர்தி ஒன்று அவதானிக்கப்பட்டதனைத் தொடர்ந்து படையினர் விழிப்பு நிலைக்கு உள்ளாக்கப்பட்டனர். எனினும் குண்டுச் சத்தங்களையும், துப்பாக்கிச் சத்தங்களையும் தாம் கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். என்னால் துப்பாக்கிச் சத்தங்களை கேட்க முடிந்தது, வெளிச்சங்கள் வானை நோக்கி ஏவப்படுவதையும் பார்த்தேன் என பொதுமகன் ஒருவர் ரொய்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார். மேலும் இரு குண்டுச் சத்தங்கள் கேட்டதாகவும் அதனை தொடர்ந்து நகரின் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனிடையே தமது ராடார் திரைகளில் வானூர்தி ஒன்று அவதானிகள்கப்பட்டதாக படையினர் தெரிவித்துள்ளனர். தமது வானூர்தி எதிர்ப்பு சாதனங்கள் இயக்கப்பட்டதாகவும், தாம் தேடுதலை நடத்துவதாகவும் சிறிலங்கா வான்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் உள்ள பயணிகளை வானூர்திகளில் இருந்து இறங்குமாறு பணிக்கப்பட்டதாகவும் எனினும் பின்னர் ஏற அனுமதிக்கப்பட்டதாகவும் ரொய்ட்டர்ஸ் நிறுவன செய்தியாளர் தெரிவித்தார். கொழும்பிலிருந்து வடக்கு நோக்கி 10 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் வத்தளைப் பகுதியில் உள்ள ஹெரவெளப்பிட்டிய எண்ணய் மற்றும் எரிவாயு சேமிப்புத் தாங்கிகள் உள்ள பகுதிகள் வான் புலிகளால் தாக்கப்பட்டதாகவும், மூன்று எண்ணெய்த் தாங்கிகள் தீப்பற்றி எரிவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.