[ஞாயிற்றுக்கிழமை, 29 ஏப்ரல் 2007, ] கொழும்பின் வடபுலத்தில் உள்ள வத்தளை கெரவெல்பிட்டிய பகுதியில் அமைந்திருக்கும், எரிபொருள் - எரிவாயுக் குதங்களில் பாரிய வெடியதிர்வுகள் ஏற்பட்டு தீப்பற்றியுள்ளன. கெரவெல்பிட்டிய பகுதியில் உள்ள மூன்று எரிபொருள் - எரிவாயுக் குதங்கள், தற்போது தீப்பற்றி எரிவதாக கூறப்படுகின்றது. இதேபோன்று முத்துராஜவெல பகுதியில் உள்ள எரிபொருள் நிலையம் ஒன்றும், தீப்பற்றி எரிவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வான்வழித் தாக்குதல்கள் காரணமாக இவை வெடித்து தீப்பற்றிய இருக்கலாம் என, உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன. இதனிடையே, இன்று அதிகாலை 1:45 மணிக்கு, கட்டுநாயக்கா வான்படை தளத்தின் ராடர் திரையில், வடக்கின் திசையில் இருந்து தெற்கை நோக்கி இரண்டு விமானங்கள் பறப்பில் ஈடுபடுவது அவதானிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கட்டுநாயக்கா - ரத்மலானை ஆகிய வான்படை தளங்களில் இருந்தும், கொழும்பு துறைமுக கடற்படை தளத்தில் இருந்தும், கொழும்பு மத்தி, வத்தளை, நீர்கொழும்பு மத்தி, கொலன்னாவ, கெலனி திஸ்ஸ, ராஜகிரிய, முத்துராஜவெல ஆகிய பகுதிகளில் இருந்தும், வான்பரப்பை நோக்கி சிறீலங்கா படைகளால் தொடர்ச்சியாக துப்பாக்கி வேட்டுக்களும், ரேசர் வேட்டுக்களும் தீர்க்கப்பட்டு, பரா வெளிச்சக் குண்டுகளும் ஏவப்பட்டுள்ளன. அதிகாலை 2:25 மணியளவில் ஓய்ந்த துப்பாக்கி வேட்டொலிகள், மீளவும் அதிகாலை 3:05 மணி முதல் செவிமடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் இரண்டு மணிநேரத்திற்கு மேலாக, கொழும்புக்கான மின்சார இணைப்புக்களும் துண்டிக்கப்பட்டு, நகரம் இருளில் மூழ்கியுள்ளது. இதனால், மேற்கிந்திய தீவுகளில் அவுஸ்திரேலிய - சிறீலங்கா துடுப்பெடுத்தாட்ட அணிகளுக்கு மத்தியில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும், உலகக் கிண்ண துடுப்பெடுத்தாட்டப் போட்டிகளின் இறுதிச் சுற்றை, தொலைக்காட்சியில் கண்டுகளிக்க முடியாது, கொழும்பில் உள்ள சிங்களவர்கள் குழப்பமடைந்துள்ளனர். இதனிடையே கொழும்பில் குழப்பநிலை ஏற்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர், வன்னியில் சிறீலங்கா வான்படையின் யுத்த விமானங்கள், வான்வழித் தாக்குதல்களை நிகழ்த்தி விட்டு, தெற்கு நோக்கி பறப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது. நன்றி:பதிவு
Sunday, April 29, 2007
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.