[திங்கட்கிழமை, 30 ஏப்ரல் 2007]
சிறிலங்கா மீதான வான்வழித் தாக்குதல்கள் நிச்சயமாக தொடரும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கிளிநொச்சியிலிருந்து தொலைபேசியூடாக ரொய்ட்டர் செய்தி நிறுவனத்துக்கு கருத்து தெரிவித்த இளந்திரையன்,
சிறிலங்கா இராணுவமானது குறிப்பாக சிறிலங்கா வான்படையானது தாங்கள் எப்போதும் இராணுவ வழியில்தான் தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதனை நிரூபிக்க விடாப்பிடியாக முயற்சிக்கிறது. ஆகையால் எங்களுக்கு வேறு வழியில்லை. திருப்பித் தாக்குதவதைத் தவிர வேறு வழி ஏதும் இல்லை. நிச்சயமாக மேலும் பல தாக்குதல்கள் நடைபெறும் என்றார்.
இதனிடையே கொழும்பு நகரிலிருந்து 20 கிலோ மீற்றர் தொலைவில் வடக்குப் பகுதியில் உள்ள தனது பிரதான எண்ணெய்க் களஞ்சியத்தை தாற்காலிகமாக மூடுவதாக றோயல் டச்சு செல் நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும் சிறிலங்காவின் பங்கு வர்த்தகமானது இன்று திங்கட்கிழமை படுவீழ்ச்சி அடைந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்படையானது ஒரே மாதத்தில் கொழும்பில் மூன்று வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்டதையடுத்து இந்தச் சரிவு ஏற்பட்டுள்ளது.
கிளிநொச்சியிலிருந்து தொலைபேசியூடாக ரொய்ட்டர் செய்தி நிறுவனத்துக்கு கருத்து தெரிவித்த இளந்திரையன்,
சிறிலங்கா இராணுவமானது குறிப்பாக சிறிலங்கா வான்படையானது தாங்கள் எப்போதும் இராணுவ வழியில்தான் தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதனை நிரூபிக்க விடாப்பிடியாக முயற்சிக்கிறது. ஆகையால் எங்களுக்கு வேறு வழியில்லை. திருப்பித் தாக்குதவதைத் தவிர வேறு வழி ஏதும் இல்லை. நிச்சயமாக மேலும் பல தாக்குதல்கள் நடைபெறும் என்றார்.
இதனிடையே கொழும்பு நகரிலிருந்து 20 கிலோ மீற்றர் தொலைவில் வடக்குப் பகுதியில் உள்ள தனது பிரதான எண்ணெய்க் களஞ்சியத்தை தாற்காலிகமாக மூடுவதாக றோயல் டச்சு செல் நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும் சிறிலங்காவின் பங்கு வர்த்தகமானது இன்று திங்கட்கிழமை படுவீழ்ச்சி அடைந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்படையானது ஒரே மாதத்தில் கொழும்பில் மூன்று வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்டதையடுத்து இந்தச் சரிவு ஏற்பட்டுள்ளது.
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.