Monday, April 30, 2007

கொழும்புக்கான இரவு நேர வானூர்தி சேவையை சிங்கப்பூர் ஏயர்லைன்ஸ் நிறுத்தியது.!!

[திங்கட்கிழமை, 30 ஏப்ரல் 2007]


கொழும்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்தாக்குதல்கள் தொடருவதால் சிறிலங்காவுக்கான இரவு நேர வானூர்தி சேவைகளை சிங்கப்பூர் ஏயர்லைன்ஸ் நிறுவனம் நிறுத்தியுள்ளது.

அந்நிறுவனம் இன்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு கொழும்புக்கும் சிங்கப்பூருக்கும் இடையேயான நாளாந்த சேவைகளில் மாற்றம் செய்துள்ளதாகவும் இன்று நள்ளிரவு முதல் இது நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கதே பசுபிக் ஏயர்லைன்ஸ் நிறுவனம் முன்னரே கொழும்புக்கான வானூர்தி சேவைகளை இடை நிறுத்துவதாக அறிவித்தது.

அதேபோல் எமிரேட்சும் கொழும்புக்கான வானூர்தி சேவைகளை நிறுத்த உள்ளது. இதற்கான அறிவிப்பு இன்று பின்னிரவு வெளியாகக்கூடும் எனத் தெரிகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிரடியான தொடர் வான்தாக்குதல்களையடுத்து இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு வானூர்திகளை சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்து திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தது.

மேலும் வான்தாக்குதல்கள் நடத்தாத நிலையிலும் அச்சத்தின் காரணமாகவும் சிறிலங்கா வான்படையினர் வான்நோக்கிச் சுடுவதும் பாதுகாப்புக் கெடுபிடிகளை மேற்கொள்வதுமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் பன்னாட்டு வானூர்தி சேவை நிறுவனங்கள் கொழும்புக்கான வானூர்தி சேவைகளை தொடர்ச்சியாக நிறுத்தி வருகின்றன.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.