Saturday, April 28, 2007

சிறீலங்காப் படைகள் வான் தாக்குதலை முறியடிக்கும் சுடுதிறணை இழந்துள்ளது.!!


சிறீலங்காப் படையினரிடம் வான்புலிகளின் விமானங்களைத் தாக்கியழிக்கும் ஏவுகணைகள் இல்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் வான்புலிகளின் தாக்குதலிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள 14 MM கனோன் ரக விமான எதிர்ப்பு துப்பாக்கிகள் மற்றும் 23 MM கனோன் ரக விமான எதிர்ப்பு துப்பாக்கிகளே பொருத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இத்தகைய விமான எதிர்ப்பு துப்பாக்கிகளை வைத்து வான்புலிகளின் விமானங்களை சுட்டுவீழத்த முடியாது. அத்துடன் யுத்த விமானங்களைப் பயன்படுத்தி விமானங்களைத் தாக்கியழிக்கும் அனுபவமும் சிறீலங்காப் விமானப் படையினருக்கு இல்லாத நிலையில் சிறீலங்கா படைகள் வான்புலிகளின் விமானங்களைச் சுட்டுவீழத்தும் சுடுதிறணை இழந்துள்ளது என இராணுவ ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

சிறீலங்காவின் அனைத்து கேந்திர முக்கியத்துவம் வாயந்த இடங்களில் விமான எதிர்ப்பு ஏவுகணைகளை சிறீலங்கா பொருத்த முற்படுமானால் சிறீலங்காவின் பாதுகாப்புச் செலவீனம் இரட்டிக்கப்பட்டு பொருளாதாரமே படுபாதளத்தினுள் விழும் என இராணுவ ஆய்வாளர்கள் மேலும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.