Thursday, April 26, 2007

வான்புலிகளின் விமானங்கள் என்ற பீதியில் படையினர் வான்நோக்கித் தாக்குதல்.!!

[வியாழக்கிழமை, 26 ஏப்ரல் 2007] புத்தள கடற்கரைப் பகுதியில் மூன்று விமானங்களை சிங்கள மீனவர்கள் அவதானிப்பட்டதையடுத்து சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளளது. வான்புலிகளின் விமானங்கள் என அச்சமடைந்த சிறீலங்காப் விமானப் படையினர், கட்டுநாயக்க விமானத் தளத்தில் அனைத்து மின் விளங்குகளும் உடன் துண்டித்து படையினர் வான்நோக்கி படையினர் கனரக அயுதங்கள் மற்றும் விமான எதிர்ப்பு ஆயுதங்கள் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இன்று இரவு 10.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விமானத் தளத்தில் சிறீலங்காப் படையினரின் பயப் பீதி காரணமாக மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி வேட்டுக்கள் மற்றும் வெடியோசைகளால் கட்டுநாயக்க விமானத் தளமே அதிர்ந்துபோனது. இதனால் கட்டுநாயக்க விமானத் தளம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அனைவரும் முதலில் நம்பினர். கட்டுநாயக்க விமானத்தளத்ததில் தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளிவந்த செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை என கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து சிறீலங்கா விமானப் படையினர் தெரிவிக்கையில் ..... இன்றிரவு 10.45 மணியளவில் சந்தேகத்திற்கு இடமான விமானங்கள் பறந்ததை அவதானித்ததையிட்டு சிறீலங்கா விமானப் படையினர் விமான எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர் எனத் தெரிவித்துள்ளனர். இதனால் பண்டாரநாயக்க விமான நிலையத்தில் நின்ற பயணிகள் பதற்றம் அடைந்து மின்சாரங்கள் துண்டிக்கப்பட்டு பயணங்கள் யாவும் நிறுத்பட்டிருந்தது. தற்போது அனைத்தும் நடவடிக்கைகளும் வழமைக்கு திரும்பியுள்ளதாக சிறீலங்கா விமானப் படையினர் தெரிவித்துள்ளனர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.