[வெள்ளிக்கிழமை, 27 ஏப்ரல் 2007]
தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்திகளை வழிமறித்து தாக்குவதற்குச் சென்ற சிறிலங்கா வான்படையினருக்குச் சொந்தமான எம்.ஐ-24 ரக உலங்கு வானூர்தி அவசர, அவரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள கட்டுநாயக்க அனைத்துலக வானூர்தி நிலையத்துக்கு அருகில் உள்ள வான்படைத்தளத்தை நோக்கி விடுதலைப் புலிகளின் மூன்று வானூர்திகள் புத்தளம் கடற்பகுதியால் செல்வதாக சிறிலங்காப் படையினருக்கு மக்கள் அறிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து அந்த வானூர்திகளை தாக்க என அனுராதபுர வான்படைத்தளத்தில் இருந்து நேற்று வியாழக்கிழமை இரவு 11.50 மணிக்கு புறப்பட்ட எம்.ஐ-24 ரக தாக்குதல் உலங்குவானூர்தி தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசர, அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் உலங்கு வானூர்தியின் இரு வானோடிகளும் பாதுகாப்பாக உள்ளதாக சிறிலங்கா வான்படைப் பேச்சாளர் அஜந்த டி சில்வா தெரிவித்துள்ள போதும், உலங்கு வானூர்திக்கு ஏற்பட்ட சேதம் குறித்து அவர் மேலதிக தகவல் எதனையும் தெரிவிக்கவில்லை.
கொழும்பு ஊடகமொன்றின் தகவலின் படி, கட்டுநாயக்க வான்படைத்தளத்தின் மீது தாக்குதல்கள் நடத்த வந்ததாக கூறப்படும் விடுதலைப் புலிகளின் இலகு ரக வானூர்திகளின் மீது எதிர்த்தாக்குதல் நடத்த புறப்பட்ட உலங்கு வானூர்தி வீழ்ந்து விபத்துக்கு உள்ளானதாகவும், உலங்கு வானூர்திக்கும் அதில் இருந்த வானோடிகளுக்கும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகல்கள் தெரிவிப்பதாக அது தெரிவித்துள்ளது.
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள கட்டுநாயக்க அனைத்துலக வானூர்தி நிலையத்துக்கு அருகில் உள்ள வான்படைத்தளத்தை நோக்கி விடுதலைப் புலிகளின் மூன்று வானூர்திகள் புத்தளம் கடற்பகுதியால் செல்வதாக சிறிலங்காப் படையினருக்கு மக்கள் அறிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து அந்த வானூர்திகளை தாக்க என அனுராதபுர வான்படைத்தளத்தில் இருந்து நேற்று வியாழக்கிழமை இரவு 11.50 மணிக்கு புறப்பட்ட எம்.ஐ-24 ரக தாக்குதல் உலங்குவானூர்தி தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசர, அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் உலங்கு வானூர்தியின் இரு வானோடிகளும் பாதுகாப்பாக உள்ளதாக சிறிலங்கா வான்படைப் பேச்சாளர் அஜந்த டி சில்வா தெரிவித்துள்ள போதும், உலங்கு வானூர்திக்கு ஏற்பட்ட சேதம் குறித்து அவர் மேலதிக தகவல் எதனையும் தெரிவிக்கவில்லை.
கொழும்பு ஊடகமொன்றின் தகவலின் படி, கட்டுநாயக்க வான்படைத்தளத்தின் மீது தாக்குதல்கள் நடத்த வந்ததாக கூறப்படும் விடுதலைப் புலிகளின் இலகு ரக வானூர்திகளின் மீது எதிர்த்தாக்குதல் நடத்த புறப்பட்ட உலங்கு வானூர்தி வீழ்ந்து விபத்துக்கு உள்ளானதாகவும், உலங்கு வானூர்திக்கும் அதில் இருந்த வானோடிகளுக்கும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகல்கள் தெரிவிப்பதாக அது தெரிவித்துள்ளது.
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.