[வெள்ளிக்கிழமை, 27 ஏப்ரல் 2007]
தமிழீழ விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்டுள்ள தமிழீழ வான்படையானது தமது தேசத்தின் முழுமையான கட்டமைப்பிற்கும் அதன் மீதான அனைத்துலகத்தின் அங்கீகாரத்தை பெறுவதற்கும் உதவும் என்று விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் இருந்து வெளியாகும் ஹிந்துஸ்தான் ரைம்ஸ் என்ற ஆங்கில ஊடகத்திற்கு தொலைபேசியூடாக விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்தாக்குதல் அரசியல், இராணுவ, இராஜதந்திர மட்டங்களில் புதிய எதிர்வுகூறல்களை ஏற்படுத்தியுள்ளது.
எங்களிடம் நிலப்பரப்பு, நிர்வாகம், சட்டம், நீதித்துறை, காவல்துறை, இராணுவம், கடற்படை என்பன இருந்தன. தற்போது வான்படையும் உள்ளது. நாங்கள் தற்போது ஒரு முழுமையான நாட்டுக்குரிய தகமைகளைக் கொண்டுள்ளோம்.
எமது கடற்புலிகள் கண்ட வளர்ச்சியைப் போல எமது வான்படையும் வளர்ச்சி அடையும்.
கடற்புலிகள் ஒரு சில படகுகளுடன் மிகச் சிறு குழுவாகவே தோற்றம் பெற்றிருந்தனர். ஆனால் இன்று அவர்கள் கடலின் ஒரு பகுதியை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். எனவே எமது வான்படையும் வளர்ச்சி அடையும் என்றார் அவர்.
விடுதலைப் புலிகள், தமது வான்படை வானூர்திகள் மூலம் சிறிலங்காவின் தென்பகுதியிலும், வடபோர்முனையிலும் மிக உயாந்த பாதுகாப்புக்களை கொண்ட தளங்களின் மீது ஒரு மாதத்தில் இரு தடவைகள் குண்டு வீச்சுக்களை நடத்தியுள்ளனர்.
இந்தியாவில் இருந்து வெளியாகும் ஹிந்துஸ்தான் ரைம்ஸ் என்ற ஆங்கில ஊடகத்திற்கு தொலைபேசியூடாக விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்தாக்குதல் அரசியல், இராணுவ, இராஜதந்திர மட்டங்களில் புதிய எதிர்வுகூறல்களை ஏற்படுத்தியுள்ளது.
எங்களிடம் நிலப்பரப்பு, நிர்வாகம், சட்டம், நீதித்துறை, காவல்துறை, இராணுவம், கடற்படை என்பன இருந்தன. தற்போது வான்படையும் உள்ளது. நாங்கள் தற்போது ஒரு முழுமையான நாட்டுக்குரிய தகமைகளைக் கொண்டுள்ளோம்.
எமது கடற்புலிகள் கண்ட வளர்ச்சியைப் போல எமது வான்படையும் வளர்ச்சி அடையும்.
கடற்புலிகள் ஒரு சில படகுகளுடன் மிகச் சிறு குழுவாகவே தோற்றம் பெற்றிருந்தனர். ஆனால் இன்று அவர்கள் கடலின் ஒரு பகுதியை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். எனவே எமது வான்படையும் வளர்ச்சி அடையும் என்றார் அவர்.
விடுதலைப் புலிகள், தமது வான்படை வானூர்திகள் மூலம் சிறிலங்காவின் தென்பகுதியிலும், வடபோர்முனையிலும் மிக உயாந்த பாதுகாப்புக்களை கொண்ட தளங்களின் மீது ஒரு மாதத்தில் இரு தடவைகள் குண்டு வீச்சுக்களை நடத்தியுள்ளனர்.
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.