[வெள்ளிக்கிழமை, 20 ஏப்ரல் 2007]
முல்லைத்தீவு கொக்கிளாய் களப்புப் பகுதியில் சிறிலங்கா வான்படைக்குச் சொந்தமான தானியங்கி வேவு வானூர்தி ஒன்று வீழ்ந்து சேதமாகியுள்ளது.
திருகோணமலை - முல்லைத்தீவு கடற்பரப்புக்கு மேலாக இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் இந்த வேவு வானூர்தி, வேவுப் பறப்பை மேற்கொண்டு படம் பிடித்துக் கொண்டிருந்த போது கொக்கிளாய் களப்புக்குள் வீழ்ந்து சேதமாகியது.
சிறிலங்கா வான்படைக்கு வீடியோப் படங்கள் மூலம் வேவுப்பணி செய்யும் ஆட்கள் அற்ற இந்த தானியங்கி வேவு வானூர்தி, முதலில் வீழ்ந்ததாக சிறிலங்கா படைத்தரப்பு தகவல் வெளியிட்டது.
ஆனால், இன்று பிற்பகல் கோளாறுக்கு உள்ளான வேவு வானூர்தி தமது கட்டுப்பாட்டு நிலையம் மூலம் தரையிறக்கப்பட்டதாக படைத்தரப்பு தெரிவித்த போதும், வேவு வானூர்தி வீழ்ந்து சேதமாகி உடைந்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் தாக்குதல்களை நடத்துவதற்காக வேவுப்பறப்பை மேற்கொண்டு வீடியோப் படம் எடுத்துக் கொடுக்கும் பணியைப் புரியும் ஆளற்ற வேவு வானூர்திகள் சிறிலங்கா வான்படைத் தளத்திலிருந்து இயக்கப்படுகின்றன.
தமிழ் மக்களால் வண்டு என்று அழைக்கப்படும் இந்த வேவு வானூர்திகளில் ஒன்று முன்னர் வன்னி கனகராஜன்குளம் விஞ்ஞானகுளத்தில் வீழ்ந்து நொருங்கியுள்ளது.
சிறிலங்கா வான்படைத் தாக்குதலுக்கு முக்கிய ஆதாரமாக இருக்கும் இந்த ஆளற்ற வானூர்திகள் இஸ்ரேலிய தயாரிப்புக்கள் ஆகும்.
திருகோணமலை - முல்லைத்தீவு கடற்பரப்புக்கு மேலாக இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் இந்த வேவு வானூர்தி, வேவுப் பறப்பை மேற்கொண்டு படம் பிடித்துக் கொண்டிருந்த போது கொக்கிளாய் களப்புக்குள் வீழ்ந்து சேதமாகியது.
சிறிலங்கா வான்படைக்கு வீடியோப் படங்கள் மூலம் வேவுப்பணி செய்யும் ஆட்கள் அற்ற இந்த தானியங்கி வேவு வானூர்தி, முதலில் வீழ்ந்ததாக சிறிலங்கா படைத்தரப்பு தகவல் வெளியிட்டது.
ஆனால், இன்று பிற்பகல் கோளாறுக்கு உள்ளான வேவு வானூர்தி தமது கட்டுப்பாட்டு நிலையம் மூலம் தரையிறக்கப்பட்டதாக படைத்தரப்பு தெரிவித்த போதும், வேவு வானூர்தி வீழ்ந்து சேதமாகி உடைந்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் தாக்குதல்களை நடத்துவதற்காக வேவுப்பறப்பை மேற்கொண்டு வீடியோப் படம் எடுத்துக் கொடுக்கும் பணியைப் புரியும் ஆளற்ற வேவு வானூர்திகள் சிறிலங்கா வான்படைத் தளத்திலிருந்து இயக்கப்படுகின்றன.
தமிழ் மக்களால் வண்டு என்று அழைக்கப்படும் இந்த வேவு வானூர்திகளில் ஒன்று முன்னர் வன்னி கனகராஜன்குளம் விஞ்ஞானகுளத்தில் வீழ்ந்து நொருங்கியுள்ளது.
சிறிலங்கா வான்படைத் தாக்குதலுக்கு முக்கிய ஆதாரமாக இருக்கும் இந்த ஆளற்ற வானூர்திகள் இஸ்ரேலிய தயாரிப்புக்கள் ஆகும்.
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.