Friday, April 20, 2007

பேச்சுவார்த்தையை ஆரம்பிக்குமாறு மகிந்தவிடம் போப் ஆண்டவர் கோரிக்கை.!!

[வெள்ளிக்கிழமை, 20 ஏப்ரல் 2007]

சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை இன்று வெள்ளிக்கிழமை சந்தித்த போப் ஆண்டவர் பெனடிக் மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டிய தேவை மற்றும் அண்மையில் அதிகரித்துள்ள மோதல்களை நிறுத்தி மீண்டும் பேச்சுக்களை ஆரம்பிப்பது குறித்து உரையாடியதாக தெரிவிக்கப்படுகின்றது.
படங்கள்: ஏபி, ஏஎஃப்பி, ரொய்ட்டர்ஸ்
விடுதலைப் புலிகளின் இராணுவ வளங்களை அழிக்கப்போவதாக கூறிக்கொண்டு போரை நடத்தி வரும் பெரும்பான்மை சிங்கள மக்களின் அரசாங்கத்தை போப் ஆண்டவர் மற்றும் வத்திக்கானின் வெளிவிவகாரத்துறை செயலாளர் கார்டினல் ராசிசிஓ பேர்ரோன் ஆகியோர் சந்தித்ததாக வத்திக்கான் தகவல்கள் தெரிவித்துள்ளன.

மனித உரிமைகள் மதிக்கப்படுவதும், மீண்டும் பேச்சுக்களை ஆரம்பிப்பதும் தான் நாட்டில் இடம்பெற்று வரும் வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒரே வழியாகும் என இந்த சந்திப்பில் போப் ஆண்டவர் தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த சில வாரங்களாக போப் ஆண்டவர் சிறிலங்கா தொடர்பாக மீண்டும் மீண்டும் பேசி வருவதும், யேசுபிரான் உயிர்த்தெழுந்த நாளின் போது அவர் வெளியிட்ட செய்தியில் 'சிறிலங்காவில் இடம்பெற்று வரும் மோதல்களை முடிவுக்கு கொண்டுவர அமைதிப் பேச்சுக்களே ஒரே வழி' என தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.