Saturday, April 21, 2007

யேர்மனியில் தொடர்ச்சியாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு.

[சனிக்கிழமை, 21 ஏப்ரல் 2007] கடந்த 10.04.07 யேர்மனியில் தொடங்கிய கவனயீர்ப்பு போராட்டத்தின் தொடர்ச்சியாக நேற்று வெள்ளிக்கிழமை போகும் நகரமக்களால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போகும் நகரமத்தியில் நேற்று மதியம் 2மணியில் இருந்து 6மணிவரையும் மற்றும் காம்பேர்க் நகரிலும் நடைபெற்ற இக்கவனயீர்ப்பு போராட்டத்தில் சிறீலங்கா அரசு யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாக மீறிவிட்டது என்பதை தெரியப்படுத்தியும் தமிழீழத் தனியரசை யேர்மனிய அரசும் யேர்மனிய மக்களும் அங்கீகரிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தும் யேர்மன் மொழியிலான துண்டுப்பிரசுங்கள் யேர்மனிய மக்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டன. நாளைய தினம் பிறிமன்,மூன்சன்கிளட்பாக்,நியூரன்பேர்க்,யூச்சன் ஆகிய நகரங்களில் இக்கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளன. இன்று சனிக்கிழமை 21.04.07 அன்று அன்னைபூபதி நினைவெழுச்சி நிகழ்வும் நாட்டுப்பற்றாளர் நாளும் வூப்பெற்றால்,லண்டோ ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளதுடன் கடந்த 18ம் திகதி வீரச்சாவடைந்த அனைத்துலகத் தொடர்பகத்தின் துணைப் பொறுப்பாளர் லெப்.கேணல் கலையழகனின் வீரவணக்க நிகழ்வும்; வூப்பெற்றால்,லண்டோ ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளன.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.