[வியாழக்கிழமை, 19 ஏப்ரல் 2007] அமெரிக்காவினால் அனைத்துலக ரீதியில் முன்னெடுக்கபட்டு வரும் பயங்கரவாதத்திற்கு எதிரான போரே சிறிலங்கா போன்ற பல நாடுகளின் உள்நாட்டுப் போர்கள் உக்கிரமடையக் காரணம். இந்த நாடுகள் அமெரிக்காவின் சொற்பதத்தை பயன்படுத்தி உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கு இராணுவத் தீர்வைக் காணும் முயற்சியில் இறங்கியுள்ளன. நோர்வேயின் அகதிகளுக்கான சபையின் ஒரு பிரிவான உள்நாட்டில் இடம்பெயர்ந்தோருக்கான கண்காணிப்பு மையம் ஜெனீவாவில் வெளியிட்ட தனது 2006 ஆம் ஆண்டுக்கான அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற சிறிலங்கா போன்ற நாடுகளில் போரினால் பெருமளவான மக்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர். இது அமைதி வழிகளிலான தீர்வுக்கான சாத்தியங்களை குறைவடையச் செய்ததுடன் அதன் மூலம் இடம்பெயர்ந்த மக்களுக்கான பாதுகாப்பையும் இல்லாது செய்துள்ளது. உலகில் மிகவும் மோசமான இடப்பெயர்வுகள் நடைபெறும் நாடுகளில் சிறிலங்காவும் ஒன்று. இங்கு அரசாங்கப் படையினர் அல்லது ஆக்கிரமித்து நிற்கும் படையினரே மக்களின் இடப்பெயர்வுகளுக்கு நேரடியாக அல்லது நேரடியற்றதாக காரணமாகின்றனர். ஆசிய நாடுகளில் இடம்பெயர்ந்த மக்களின் எண்ணிக்கை அண்மைக்காலங்களில் தொடர்ந்து குறைந்து வந்த போதும், கடந்த வருடம் அது மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால் சிறிலங்கா, ஆப்கானிஸ்தான், தீமோர் லெஸ்ரே, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இடம்பெயர்ந்த மக்களின் தொகை இந்த வருட இறுதியில் 3 மில்லியனை தொட்டுவிடும். சிறிலங்கா அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடந்த ஆண்டு ஏப்ரலில் உக்கிரமடைந்த மோதல்களின் பின்னர் 4,000 மக்கள் கொல்லப்பட்டதுடன், 200,000 மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இவற்றில் பிரதானமாக வடக்கு - கிழக்குப் பகுதி மக்களே பாதிக்கப்பட்டுள்ளனர். இரு தரப்பினரும் பொதுமக்களை குறிவைத்து தாக்கி வருகின்றனர். இடம்பெயர்ந்த மக்களின் சுதந்திரமான நடமாட்டங்களுக்கும் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. 2006 ஆம் ஆண்டு முடிவில் சிறிலங்காவில் நடைபெற்ற மோதல்களால் மொத்தமாக இடம் பெயர்ந்த மக்களின் எண்ணிக்கை 500,000 ஆக எதிர்பார்க்கப்பட்டது. பொதுமக்களுக்கு எதிராக இராணுவ உத்திகள் முன்னெடுக்கப்படுவதனாலும், அவர்கள் மீதான திட்டமிட்ட தாக்குதல்கள், போக்குவரத்து தடைகள், மனித கேடையங்களாக பயன்படுத்தப்படுதல் என்பவற்றால் மனித உரிமைகளை; மிகவும் மோசமான நிiமையை அடைந்துள்ளது. சிறீலங்கா அரசும் விடுதலைப் புலிகளும் மக்கள் மோதல் நடைபெறும் பகுதிகளில் இருந்து வெளியேறுவதை தடுப்பதனால் மக்கள் அந்த பகுதிகளில் சிக்குண்டு உள்ளனர். 2006 ஆம் ஆண்டின் முடிவில் 130,000 மக்கள் இப்படி சிக்குண்டு இருந்தனர். அவர்களுக்கான அனைத்துலகத்தின் உதவிகளும் தடுக்கப்பட்டு இருந்தது என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
Thursday, April 19, 2007
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.