Thursday, April 19, 2007

படுவான்கரை மீள் குடியேற்றம் தாமதம் - த.தே.கூ கண்டனம்.!!

[வியாழக்கிழமை, 19 ஏப்ரல் 2007] மட்டக்களப்பு படுவான்கரை மக்களை மீளக் குடியேற்றுவதற்கு 3 மாதங்கள் தேவையென சிறீலங்கா அரசு தீர்மானித்திருப்பதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. நேற்று இடம்பெற்ற படுவான்கரை மீள் குடியேற்றம் பற்றிய கூட்டத்தில் படுவான்கரையில் இருந்து இடம்பெயர்ந்து மக்களை ஜுலை இறுதியில் மீள் குடியேற்றுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, மீள் குடியேற்றம் பற்றிய நேற்றைய கூட்டத்திற்கு தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டவில்லை என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்டத்திற்கான அபிவிருத்தி தொடர்பான கூட்டத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது. இதேவேளை, மட்டக்களப்பு மீள்குடியேற்றக் கூட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைக்கப்படாது விட்டமை, அரசுத் தலைவர் மாளிகை சம்மத்தப்பட்ட விடயம் என, கிழக்கு இடர் முகாமைத்துவ அமைச்சர் அமீர் அலி கூறியுள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.