முடியுமானால் விடுதலைப் புலிகள் பகல்வேளையில் வான்தாக்குதல் நடத்தட்டும். அதனை எவ்வாறு? முறியடிப்பது என நாங்கள் காட்டுகின்றோம் என்று சிறிலங்காவின் போக்குவரத்து அமைச்சரும் அரசாங்கத்தின் பேச்சுவார்த்தைக் குழுவின் உறுப்பினருமான ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சிறப்பு பணிப்புரையின் பேரில் நேற்று செவ்வாய்க்கிழமை யாழ். பலாலி கூட்டுப்படைத்தளத்துக்குச் சென்று, விடுதலைப் புலிகள் வான்தாக்குதல்கள் நடத்திய இடங்களை பார்வையிட்டார்.
கொழும்பு திரும்பிய அவர், பிபிசி தமிழோசைக்கு நேற்று இரவு கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது:
அரசாங்கம் தொடர்ந்து யாழ்ப்பாணத்திலும், வன்னியிலும், கிழக்கிலும் வான்தாக்குதல்களை நடத்தி வருகின்றது. இந்நிலையில் விடுதலைப் புலிகள் வான்தாக்குதல்களை நடத்துவது ஆச்சரியப்படும் விடயமல்ல.
உலகில் மிகவும் பலமுள்ள இராணுவப் படை விடுதலைப் புலிகள் வசம் உள்ளது என்பதனை நாங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும். இந்நிலையில் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்துவார்கள். அதனை நாங்கள் எதிர்கொள்ள வேண்டும்.
விடுதலைப் புலிகள் கிளர்ச்சி அமைப்பு அல்ல. மாறாக பயங்கரவாத அமைப்பு. எனவே விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்துவது புதுமையல்ல.
ஆனால் விடுதலைப் புலிகள் இரவு நேரங்களிலேயே தாக்குதல் நடத்துகின்றனர். முடியுமானால் விடுதலைப் புலிகள் பகல்வேளையில் வான்தாக்குதல் மேற்கொள்ளட்டும். அதனை எவ்வாறு?முறியடிப்பது என்று நாங்கள் காட்டுகின்றோம்.
இந்த சம்பவம் தொடர்பாக ஆராய நானும் அமைச்சர் ராஜித சேனாரத்னவும் இன்னும் சில அமைச்சர்களும் யாழ்ப்பாணம் சென்றோம். அங்கு நிலைமைகளை ஆராய்ந்து அரச தலைவருக்கு நிலைமைகளை தெரிவிவித்துள்ளோம் என்றார் அவர்.
நல்ல கதை நீளமில்லை என்பது இது தான். பகலில் வரட்டும் பாப்பம் என்பது போல்,
ReplyDelete"பதிவா வரட்டும் பாப்பம்
சொல்லிப்போட்டு வரட்டும் பாப்பம்
எங்கட துவக்குக்கு நேரா வரட்டும் பாப்பம் ....."
என்ன பைத்தியமா அமைச்சருக்கு.
இதென்ன பொறுப்பில்லாத பேச்சு? எதிரி இந்த நேரத்தில்தான் தாக்க வேண்டும் என்று யாராவது கூற இயலுமா? கேட்பவர்கள் வழித்து கொண்டு சிரிக்க மாட்டார்களா?
ReplyDeleteஅன்புடன்,
டோண்டு ராகவன்