[வியாழக்கிழமை, 19 ஏப்ரல் 2007]
சிறீலங்கா இனவழிப்பு அரச பயங்கரவாத நடவடிக்கையின் ஒரு வடிவம் தான்,ஒரு ஊடகங்கள் மீது தொடுக்கின்ற போர் என தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் நேற்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சிப் பணியாளர்களை மதிப்பளிக்கும் நிழக்வில் கலந்துகொண்டு உரையாடும்போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
எமது விடுதலைப் போராட்டத்தை எமது தேசியத் தலைவர் எவ்வளவோ தூரம், எவ்வளவோ நெருக்கடிகள், எவ்வளவோ சவால்களையும் எதிர்கொண்டு இந்த உன்னதமான நிலையைக் கட்டிவளர்த்தாரோ, அதேபோன்றுதான் ஊடகத்துறையிலும் எமது இனத்தினுடைய, எமது தேசத்தினுடைய வல்லமையையும் தமிழீழத் தேசியத் தலைவர் கட்டியெழுப்பியுள்ளார்.
அந்த வல்லமையின் வெளிப்பாடுதான் எமது தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி. இத் தொலைக்காட்சி சிறீலங்கா அரசாங்கத்திற்கு பல நெருக்கடிகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அதாவது சிறீலங்கா அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள், சிறீலங்கா அரசாங்கத்தினால் எமது மக்கள் மீது தொடுக்கப்படுகின்ற இனவழிப்பு வன்முறைகளை வெளிப்படுத்துகின்ற யதார்த்தமான போக்கு, மற்றது எங்களுடைய தமிழ்த் தேசிய உணர்வைக் வளர்க்கின்ற போக்கை தமிழ்த் தேசியத் தொலைக்காட்சி கட்டியெழுப்புகின்றமை சிறீலங்கா அரசாங்கத்தை அச்சமடையச் செய்துள்ளன.
எங்கள் மக்கள் மீது அநீதிகள், அவலங்கள், இந்த இனவழிப்பு நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் அறிந்துவிடக்கூடாது என்பததே அவர்களுடைய ஒரே ஒரு நோக்கமாக உள்ளது. அந்த நோக்கத்தின் அடிப்படையில் தான் இதை இல்லாது செய்ய முயல்கின்றார்கள்.
சிறீலங்காவின் இத்தகைய நடவடிக்கைகளும் இனவழிப்பு அரச பயங்கரவாத நடவடிக்கையின் ஒரு வடிவம் தான். ஒரு ஊடகங்கள் மீது தொடுக்கின்ற போரும் அரச பயங்கரவாதச் செயற்பாட்டின் வெளிப்பாடுதான். எங்களுடைய தொலைக்காட்சியோ, வானொலியோ, எங்களுடைய ஊடகங்களை நிறுத்த முற்படுவது என்பது தமிழர்களுடைய இருப்பை இல்லாது செய்வதற்கான ஒரு முயற்சியின் வடிவம் தான். ஆகவே இதற்கு எதிராக நாங்கள் போராடவேண்டிய நிர்பந்தத்திற்குள்ளும், கடப்பாட்டுக்குள்ளும் நாங்கள் நிற்கின்றோம். நிட்சயமாக நாங்கள் அதிலும் வெற்றிபெறுவோம் என்றார் தமிழீழத் அரசியற்துறைப் பொறுப்பாளர்.
எமது விடுதலைப் போராட்டத்தை எமது தேசியத் தலைவர் எவ்வளவோ தூரம், எவ்வளவோ நெருக்கடிகள், எவ்வளவோ சவால்களையும் எதிர்கொண்டு இந்த உன்னதமான நிலையைக் கட்டிவளர்த்தாரோ, அதேபோன்றுதான் ஊடகத்துறையிலும் எமது இனத்தினுடைய, எமது தேசத்தினுடைய வல்லமையையும் தமிழீழத் தேசியத் தலைவர் கட்டியெழுப்பியுள்ளார்.
அந்த வல்லமையின் வெளிப்பாடுதான் எமது தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி. இத் தொலைக்காட்சி சிறீலங்கா அரசாங்கத்திற்கு பல நெருக்கடிகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அதாவது சிறீலங்கா அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள், சிறீலங்கா அரசாங்கத்தினால் எமது மக்கள் மீது தொடுக்கப்படுகின்ற இனவழிப்பு வன்முறைகளை வெளிப்படுத்துகின்ற யதார்த்தமான போக்கு, மற்றது எங்களுடைய தமிழ்த் தேசிய உணர்வைக் வளர்க்கின்ற போக்கை தமிழ்த் தேசியத் தொலைக்காட்சி கட்டியெழுப்புகின்றமை சிறீலங்கா அரசாங்கத்தை அச்சமடையச் செய்துள்ளன.
எங்கள் மக்கள் மீது அநீதிகள், அவலங்கள், இந்த இனவழிப்பு நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் அறிந்துவிடக்கூடாது என்பததே அவர்களுடைய ஒரே ஒரு நோக்கமாக உள்ளது. அந்த நோக்கத்தின் அடிப்படையில் தான் இதை இல்லாது செய்ய முயல்கின்றார்கள்.
சிறீலங்காவின் இத்தகைய நடவடிக்கைகளும் இனவழிப்பு அரச பயங்கரவாத நடவடிக்கையின் ஒரு வடிவம் தான். ஒரு ஊடகங்கள் மீது தொடுக்கின்ற போரும் அரச பயங்கரவாதச் செயற்பாட்டின் வெளிப்பாடுதான். எங்களுடைய தொலைக்காட்சியோ, வானொலியோ, எங்களுடைய ஊடகங்களை நிறுத்த முற்படுவது என்பது தமிழர்களுடைய இருப்பை இல்லாது செய்வதற்கான ஒரு முயற்சியின் வடிவம் தான். ஆகவே இதற்கு எதிராக நாங்கள் போராடவேண்டிய நிர்பந்தத்திற்குள்ளும், கடப்பாட்டுக்குள்ளும் நாங்கள் நிற்கின்றோம். நிட்சயமாக நாங்கள் அதிலும் வெற்றிபெறுவோம் என்றார் தமிழீழத் அரசியற்துறைப் பொறுப்பாளர்.
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.