Wednesday, March 28, 2007

மட்டக்களப்பில் சிறிலங்கா இராணுவத்தினரின் முன்னகர்வு முயற்சி முறியடிப்பு

[புதன்கிழமை, 28 மார்ச் 2007] மட்டக்களப்பில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான கொடுவாமடுவுக்குள் சிறிலங்கா இராணுவத்தினரும், துணை இராணுவக் குழுவான கருணா குழுவினரும் இணைந்து கவச வாகனங்கள் சகிதம் ஊடுருவ எடுத்த முயற்சியை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். செங்கலடிப்பாலம் இராணுவ முகாமில் இருந்து இன்று புதன்கிழமை அதிகாலை 3:30 மணியளவில் இம் முன்னகர்வினை இராணுவத்தினரும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவினரும் மேற்கொண்டனர். முன்னகர்வை எதிர்த்து விடுதலைப் புலிகள் பதில் தாக்குதல் நடத்திய போது, இராணுவத்தினரும் துணை இராணுவக் குழுவினரும் ஆயுதங்களை கைவிட்டு பின்வாங்கி ஓடினர். ரி-56 ரக துப்பாக்கிகள் - 08 உட்பட பல ஆயுத தளபாடங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், துணை இராணுவக் குழுவான கருணா குழுவினரின் இரு உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. படுகாயமடைந்த நிலையில் துணை இராணுவக் குழு உறுப்பினர்களான கருணா குழு உறுப்பினர் நால்வர், செங்கலடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். படுகாயமடைந்த நால்வரும் தச்சன், வர்மன், நேசன், தேவிகன் ஆகியோர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். முன்னகர்வு முயற்சியில் ஏற்பட்ட தோல்வியினால் இராணுவத்தினருடன் இணைந்து வந்த கருணா குழுவினரின் மிகுதிப் பேர் இராணுவ முகாம்களின் எல்லையில் உள்ள தங்களது முகாம்களுக்குள் தப்பிச் சென்றனர். நன்றி:புதினம்

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.