Thursday, March 29, 2007

எமது ராடார்கள் தரமானவை: இந்தியா

[வியாழக்கிழமை, 29 மார்ச் 2007]


சிறிலங்காப் படையினரின் கட்டுநாயக்க வான்படைத் தளத்தின் மீது கடந்த திங்கட்கிழமை தமிழீழ வான்படை நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து கட்டுநாயக்கவில் உள்ள ராடார் நிலையங்களின் செயற்திறன் தொடர்பாக கேள்வி எழுந்துள்ள நிலையில் தம்மால் சிறிலங்காவிற்கு வழங்கப்பட்ட ராடார் தொகுதிகள் தரமானவை என்று இந்தியா தெரிவித்துள்ளது.

எமது ராடார் தொகுதிகள் மிகவும் தரம்வாய்ந்தவை, நன்றாக தொழிற்படக்கூடியவை, அது முறையாக உபயோகப்படுத்தப்பட வேண்டும் என்று கொழும்பில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

2005 ஆம் ஆண்டு ஜுன் மாதம் முன்னாள் காலம் சென்ற வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன், கதிர்காமர் விடுதலைப் புலிகளின் வான்படையினர் தொடர்பாக அமெரிக்காவின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் கொண்டோலீசா றைசுடனான சந்திப்பின் போது எச்சரிக்கையை விடுத்திருந்தார்.

அதே மாதம் இந்தியாவிடம் இருந்து ரடார் கருவிகளை வாங்குவதற்கு சிறிலங்கா ஒப்புக்கொண்டிருந்தது. இந்தியா - 11 என்னும் தலைப்பில் வழங்கப்பட்ட இந்த ரடார்களை பாரத் எலெக்ரோனிக் லிமிற்றட் நிறுவனம் வடிவமைத்திருந்தது. கடந்த ஆண்டு அவை சிறிலங்காவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.